குளித்தலை எல்ஐசி கிளையில்67வது இன்சூரன்ஸ் வார விழா

குளித்தலை, செப்.3: குளித்தலை எல்ஐசி கிளை அலுவலகத்தில் ஒரு வார காலம் நடைபெறும் எல்ஐசி 67வது இன்சூரன்ஸ் வார விழா தொடங்கியது. விழாவிற்கு கிளை மேலாளர் கீதா தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி சசிகலா, உதவி நிர்வாக அதிகாரி கௌரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி லலிதா அனைவரையும் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தனியார் பள்ளி தாளாளர் ரம்யா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். வளர்ச்சிஅதிகாரிகள் கணேஷ், மோகன், அலுவலர்கள் மகேஷ், நாகநாதன், முகவர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழா ஒரு வார காலம் நடைபெறுகிறது. அதில் 4ம் தேதி முகவர் தின விழா, 5ம் தேதி ஊழியர்கள் தின விழா, 7ம் தேதி குழந்தைகள் தின விழா நடைபெறுகிறது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்று அவர்களுக்கு இறுதி நாள் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இன்சூரன்ஸ் வார விழாவையொட்டி தஞ்சை கோட்ட மேலாளர் உத்தரவின் படி குளித்தலை கிளை சார்பில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து அனைத்து பள்ளி வளாகத்திலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. விழாவில் கிளை அலுவலர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக அதிகாரி சீனிவாசன் நன்றி கூறினார்.

The post குளித்தலை எல்ஐசி கிளையில்67வது இன்சூரன்ஸ் வார விழா appeared first on Dinakaran.

Related Stories: