கிரிமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலமாக கெர்ச் பாலம் உள்ளது. கெர்ச் பாலம் வழியாகதான் ரஷ்ய படைகளுக்கு தேவையான போர் தளவாடங்கள் உள்பட அனைத்து பொருட்களும் எடுத்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் கெர்ச் பாலம் மீது உக்ரைனின் டிரோன்கள் நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் ரஷ்ய படைகள் உக்ரைனின் 3 டிரோன்களை தடுத்து சுட்டு வீழ்த்தியதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து உக்ரைன் எந்த தகவலும் வௌியிடவில்லை.
The post கிரிமியாவின் கெர்ச் பாலம் மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி: 3 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா appeared first on Dinakaran.