அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு

 

மதுரை, செப். 1: மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்தார். மன்றத் தலைவர் நேரு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மணிகண்டன் வரவேற்றார். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வளரவேண்டியதன் அவசியம் குறித்து பேராசிரியர் கண்மணி விளக்கம் அளித்தார். இதில், மன்ற பொறுப்பாளர்கள் செல்வம், முருகானந்தம், காசி, சுரேஸ் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: