தர்மபுரி கோயில் விழாவில் மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி, செப்.1: தர்மபுரியில், முத்துமாரியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்மபுரி வட்டார வளர்ச்சி நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

27ம் தேதி முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல், 28ம் தேதி சக்தி கரகம் அழைத்தல், பூ மிதித்தல், 29ம் தேதி அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. நான்குரோடு, பெரியார் சிலை, புரோக்கர் ஆபிஸ் வழியாக ஊர்வலம் கோயிலை அடைந்தது. இதில், சுவாமி வேடம் அணிந்தவாறு பக்தர்கள் உலா வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post தர்மபுரி கோயில் விழாவில் மாவிளக்கு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: