திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா

 

திருப்புத்தூர், ஆக.30: திருப்புத்தூர் சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதர் சுவாமி, யோக பைரவர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது.பிரதோஷ விழாவை முன்னிட்டு மாலை திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரர் பெருமானுக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர்,பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் திருத்தளிநாதரும், சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருத்தளிநாதருக்கும், நந்திக்கும் வில்வமாலை அணிவித்தும், நெய் தீபம் ஏற்றியும் சுவாமியை வழிபாடு செய்தனர்.

The post திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Related Stories: