இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுவாமி சக்ரபாணி மகாராஜ் கூறியதாவது: சந்திரயான்-3 வெற்றிகரமாக தரை இறங்கிய இடத்துக்கு ‘‘சிவசக்தி முனையம்” என பெயர் சூட்டிய பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மற்ற மதத்தினர் நிலவை உரிமை கொண்டாடுவதற்கு முன்பு நிலவின் மீது இந்திய அரசு தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும். எந்த பயங்கரவாதிகளும் அங்கு சென்றடையாதவாறு இந்திய அரசு விரைவாக செயல்பட்டு இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் உடனே நிறைவேற்ற வேண்டும். சந்திரயான்-3 லேண்டர் தரை இறங்கிய இடமான சிவசக்தி முனையத்தை தலைநகரமாக கொண்டு இந்து நாட்டை நிலவில் இந்தியா உருவாக்க வேண்டும். நிலவை இந்து சனாதன ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
The post சிவசக்தி இடத்தை தலைநகரமாக வைத்து நிலவில் இந்து நாட்டை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சாமியார் வேண்டுகோள் appeared first on Dinakaran.