கீழச்சீவல்பட்டியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

 

திருப்புத்தூர், ஆக.27: திருப்புத்தூர் அருகே கீழச்சீவல்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, பள்ளியின் பொருளாளர் அம்மையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி செயலாளர் வெங்கடாசலம் செட்டியார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு 228 மாணவ,மாணவிகளுக்கு அரசின் விலை வழங்கினார். இதில், வட்டாட்சியர் வெங்கடேசன், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் கேபிஎஸ்.பழனியப்பன், திமுக ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எஸ்எம்.பழனியப்பன், கீழச்சிவல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

The post கீழச்சீவல்பட்டியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: