மதுரை ரயில் பெட்டி தீ விபத்து பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மதுரை ரயில் பெட்டி தீ விபத்து பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். லக்னோவில் இருந்து வந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகள் தனிப்பட்ட முறையில் பதிவு செய்த ரயில் பெட்டியில் சமையல் சிலிண்டரை அனுமதித்தது எப்படி? என்று முத்தரசன் கேள்வி எழுப்பினார். ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டரும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

The post மதுரை ரயில் பெட்டி தீ விபத்து பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: