அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்வரின் காலை சிற்றுண்டி கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு

 

காஞ்சிபுரம், ஆக.23: காஞ்சிபுரம் தும்பவனம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் 37 பள்ளிகளில் 3,579 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், திங்கள்கிழமை ரவா உப்புமா, சாம்பாரும், செவ்வாய்கிழமை சோள காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண் பொங்கல் சாம்பாரும், வியாழன்கிழமை அரிசி உப்புமா, சாம்பாரும், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி அல்லது ரவா கேசரியும் என ஒவ்வொரு பள்ளி நாட்களிலும் சுழற்சி முறையில் வெவ்வேறு வகையான சிற்றுண்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.

இதன் தொடர் நிகழ்வாக, முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்வரின் காலை சிற்றுண்டி கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: