மலையாள நடிகை பலாத்கார வழக்கு: விசாரணையை தள்ளி வைக்க கோரிய நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்திலுள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் அதை செல்போனில் பதிவு செய்தது. இந்த வழக்கில் பின்னர் கைது செய்யப்பட்ட சுனில்குமார் என்பவரிடமிருந்து பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றினர். இந்த மெமரி கார்டு பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதில் இருந்த காட்சிகளை நீதிமன்றத்தில் வைத்து யாரோ செல்போனில் போட்டு பார்த்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி நடிகை தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணைக்கு திலீப் ஏன் பயப்பட வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post மலையாள நடிகை பலாத்கார வழக்கு: விசாரணையை தள்ளி வைக்க கோரிய நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: