அவரிடமிருந்து 3 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பெங்களூருவிலிருந்து வரும் வழியில் அவர் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி உள்பட பல்வேறு பகுதிகளில் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளார். பெங்களூருவில் ஆயுர்வேத தெரபிஸ்டாக பணிபுரிந்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை போதைக்கு அடிமையாக்கி வந்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இவர் பெருமளவு போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். விசாரணைக்குப் பின் கலால் துறையினர் அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுக்கு காதல் வலைவீசி போதைப்பொருள் விற்பனை: ஆயுர்வேத தெரபிஸ்ட் கைது appeared first on Dinakaran.