ஒடிசா முதல்வரின் தனி செயலாளர் வி.கே.பாண்டியன் மீது மை வீச்சு

பூரி: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் பொறுப்பு வகித்து வருகிறார். பூரி மாவட்டம் சத்யபாடியில் உள்ள ஒரு பள்ளி நிகழ்ச்சியில் வி.கே. பாண்டியன் மற்றும் பூரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மா ஆகியோர் நேற்று கலந்து கொண்டனர். அப்போது வி.கே.பாண்டியன், சமர்த் வர்மா ஆகியோர் மீது கானாஸ் தொகுதியின் ஹரிபூர் கிராமத்தில் வசிக்கும் பாஸ்கர் சாஹூ என்பவர் மை வீசியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அரசியல் உள்நோக்கம் காரணமாக மை வீசப்பட்டதாக தெரிகிறது.

The post ஒடிசா முதல்வரின் தனி செயலாளர் வி.கே.பாண்டியன் மீது மை வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: