இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி வெளியிட்ட வீடியோவில், ‘கிராம சபைக் கூட்டம் ஒன்றரை மணி நேரமாக நன்றாகதான் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாஜவினர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தூண்டிவிட்டவர்கள்தான் இதுபோல நடந்து கொண்டனர். இந்தியா முழுவதும் பொய் பிரசாரம், வெறுப்பு போன்றவற்றை மூலதனமாக கொண்டு பாஜ தேர்தலை எதிர்கொள்கிறது. கரூர் தொகுதி மட்டுமின்றி, தமிழகத்தில் எந்த தொகுதியிலும் பாஜ வெற்றி பெறாது. இந்தியா கூட்டணிதான் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என்று கூறி உள்ளார். ஜோதிமணியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
The post பாஜ லட்சக்கணக்கில் செலவு செய்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது: காங். எம்பி ஜோதிமணி வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.