திருவள்ளுர்: செங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நடைபயிற்சி செய்தபோது பாடியநல்லுர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சரவணன், கௌரிசங்கர், மோகன் ஆகியோர் ஆற்காடு கோர்ட்டிலும் முருகேசன், சங்கர் சேலத்திலும் சரண் அடைந்தனர்.