இந்நிலையில், மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல சிகிச்சை வழங்குவதற்காக தன்னார்வத்துடன் சென்றவர் மருத்துவர் ராதிகா முருகேசன். சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த இவர் தற்போது அம்மாநில மக்களுக்கு தேவையான மருந்துகளுக்கு நிதி திரட்டி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது அங்குள்ள மக்களுக்கு தூக்கமின்மை காரணமாக மனநல பிரச்சனைகளுக்கு நாங்கள் எடுத்துச் சென்ற மருந்துகள் போதவில்லை என்று கூறினார். இரண்டு இன மக்களும் ஒற்றுமையாக வாழவே விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
The post மணிப்பூர் கலவரம்… மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க எடுத்துச் சென்ற மருந்துகள் போதவில்லை: மருத்துவர் ராதிகா முருகேசன் பேட்டி appeared first on Dinakaran.
