சுதந்திர தின விழாவையொட்டி அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

செங்கல்பட்டு,: செங்கல்பட்டில் நடந்த சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சியில் உயரதிகாரிகள் பங்கேற்றனர். நாடு முழுவதும் இன்று 76வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காவலர் பங்கேற்கும் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் லக்ஷ்மிபதி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், உதவி காவல் கண்காணிப்பாளர் பாரத், உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சுதந்திர தின விழாவையொட்டி அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: