அதைத் தொடர்ந்து யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் தளங்களிலும் இந்த உரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் மோடியின் பேச்சைவிட ராகுல் காந்தியின் பேச்சை கூடுதலாக பல லட்சம் பேர் பார்த்து இருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. சன்சத் தொலைக்காட்சியில் ராகுலின் பேச்சை 3.5 லட்சம் பேரும் மோடி பேச்சை 2.3 லட்சம் பேரும் பார்த்துள்ளனர். யூடியூபில் ராகுலின் பேச்சை 26 லட்சம் பார்வையாளர்களும் மோடி பேச்சுசை 6.5 லட்சம் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர். ட்விட்டரில் ராகுலின் பேச்சை 23 ஆயிரம் பேரும் மோடியின் பேச்சை 22 ஆயிரம் பேரும் பார்த்தனர். பேஸ்புக்கில் ராகுல் பேச்சுக்கு 73 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ள அதே சமயம் மோடி பேச்சுக்கு வெறும் 11,000 பார்வையாளர்களே கிடைத்துள்ளனர். இந்த தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, வெற்று வாக்குறுதிகளைவிட உண்மையான தலைவரின் பேச்சை கேட்கவே மக்கள் விரும்புவார்கள் என்பது நிரூபணமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
The post பிரதமர் மோடி ஆற்றிய பதில் உரையை விட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கே சமூக வலைத்தளங்களில் அதிக பார்வையாளர்கள்! appeared first on Dinakaran.