ஊழலே வெளியேறு: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: மகாத்மா காந்தி தலைமையிலான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். காந்திஜியின் தலைமையில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு இந்த இயக்கம் முக்கிய பங்காற்றியது. இன்று இந்தியா ஒரே குரலில் கூறுகிறது. இந்தியாவில் இருந்து ஊழலே வெளியேறு, வாரிசு அரசியலே வெளியேறு, திருப்திபடுத்தும் முடிவே வெளியேறு என்பது தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஊழலே வெளியேறு: பிரதமர் மோடி டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: