லெவிஞ்சிபுரம், செட்டிகுளம் பகுதியில் பல்வேறு திட்ட பணி துவக்கம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

கூடங்குளம் ஆக.9: லெவிஞ்சிபுரம், செட்டிகுளம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டியதுடன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட லெவிஞ்சிபுரம் ஊராட்சியில் சபாநாயகர் அப்பாவு, 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்கவும், ரஜகிருஷ்ணாபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், விஸ்வநாதபுரத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை அமைக்கவும், லெவிஞ்சிபுரத்தில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், செட்டிகுளம் ஊராட்சியில் 5 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், சிவசக்திபுரத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

கூட்டப்புளி புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மற்றும் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் 202பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகளுக்கான காத்திருப்போர் அறையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர் ராமலட்சுமி, மாவட்ட பஞ். கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லிங்கம், செட்டிகுளம் பஞ். துணைத்தலைவர் ஜெகன் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

The post லெவிஞ்சிபுரம், செட்டிகுளம் பகுதியில் பல்வேறு திட்ட பணி துவக்கம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் சபாநாயகர் அப்பாவு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: