ஆவின் நிறுவனம் சிறந்த கட்டமைப்பு கொண்டது. அனைத்து பிரிவுகளிலும் உள்ள ஊழியர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இருக்கிறோம். விவசாயிகளுக்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6.9% மின்சாரம் சேமிக்கப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பால் உபபொருட்களின் தரம் மற்றும் சுவை ஒரே மாதிரியான அளவை கொண்டதாக விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத், திருச்சி, ஐஐஎம் இயக்குநர் பவன் குமார் சிங், ஐஐஎம் பேராசிரியர் சரவணன் கலந்துகொண்டனர்.
The post நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி ஐஐஎம் உடன் ஆவின் நிறுவனம் ஒப்பந்தம் appeared first on Dinakaran.