வதிலை கணவாய்பட்டியில் மாவட்ட கூடை பந்தாட்ட போட்டி

வத்தலக்குண்டு, ஆக. 8: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் மதுரை சகோதயா சார்பில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, கொடைரோடு சிபிஎஸ்இ பள்ளி மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடந்தது. 17 வயது முதல் 19 வயதினர் பிரிவில் வத்தலக்குண்டு பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளி முதலிடமும், 14 வயது முதல் 16 வயதினர் பிரிவில் பழனி அக்ஷயா பள்ளி முதலிடமும், 12 வயது முதல் 14 வயதினர் பிரிவில் திண்டுக்கல் அச்சுதா அணி முதலிடமும் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பள்ளி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்க, தாளாளர் கயல்விழி முன்னிலை வகித்தார். முதல்வர் ரியா வரவேற்றார். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் ஜெயசிங் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். இதில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக தலைவர் செண்பக மூர்த்தி, துணை செயலாளர் மருதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை கார்த்திகா தொகுத்து வழங்கினார். மாணவி ஹேமா ஸ்ரீ நன்றி கூறினார்.

The post வதிலை கணவாய்பட்டியில் மாவட்ட கூடை பந்தாட்ட போட்டி appeared first on Dinakaran.

Related Stories: