பவானியில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்

பவானி, ஆக. 6: பவானியில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், அரசு உறுதிமொழிக் குழுத் தலைவருமான வேல்முருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.பழனிசாமி தலைமையில் பவானியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்கள் கைலாசம் (மேற்கு), செங்கை ரவி (வடக்கு), மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் சீனிவாசன், மேற்கு மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.வேல்முருகன் வரவேற்றார்.

தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சோதி குமரவேல், தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து சிறப்புரையாற்றினர். மேட்டூர் அணையின் உபரிநீரை பவானி, அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்ப கோரி பவானி, தேர் வீதி, அரிசி மார்க்கெட் திடலில் இன்று மாலை இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க வரும் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.மாநில ஊடகப் பிரிவு தலைமை அலுவலக துணை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், நிர்வாகிகள் குணசேகரன், செல்வம், கண்ணன், தினேஷ், வினோத்குமார், இம்மானுவேல், நாகராஜ், தவசி அம்மாள், ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பவானியில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: