ஆடி 18 முன்னிட்டு செல்லாயி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருமயம்,ஆக.5: திருமயம் அருகே ஆடி 18 முன்னிட்டு அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் செல்லாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி 18 முன்னிட்டு 3ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறிய அளவிலான தேரில் அம்மன் சிலையை வைத்து பக்தர்கள் கோயில் வீட்டில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக இழுத்து வந்தனர். பின்னர் கருப்பர் கோயில், பட்டவர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதனிடையே சாமி ஊர்வலமாக வந்த வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

மேலும் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனிடைய நேற்று நடைபெற்ற விழாவில் பட்டவர் கோயிலில் இருந்து செல்லாயி அம்மன் ஊர்வலமாக கோயில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

The post ஆடி 18 முன்னிட்டு செல்லாயி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: