பயோனியர் குமாரசாமி கல்லூரியில் மாவட்ட செஸ் போட்டி

நாகர்கோவில், ஆக.4: பயோனியர் குமாரசாமி கல்லூரியும், சேலஞ்ச் செஸ் அகாடமியும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டி பயோனியர் குமாரசாமி கல்லூரியில் வைத்து நடந்தது. பள்ளி, கல்லூரி, பொது என 3 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 473 வீரர்கள் 110 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் இந்திரா பரிசு வழங்கி பாராட்டினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் சதீஷ்குமார் வரவேற்றார். பயிற்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

The post பயோனியர் குமாரசாமி கல்லூரியில் மாவட்ட செஸ் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: