எனவே, தற்போது மத்திய சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதன் மூலம், அதன் விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஓபிசி உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை அடுத்தக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
The post நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் ஓபிசி உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.