இதுகுறித்து ரயில்வே போலீசார் தகவலறிந்ததும், திருப்பதி நோக்கி சென்ற ரயிலில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு, அரக்கோணம் ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும், அப்பெண் புகார் அளிக்க விரும்பாததால், பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில்நிலைய தடங்களில் இருக்கும் சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதே ரயில் மார்க்கத்தில், ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன் பெரம்பூர் மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதி ரயில் நிலையங்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
The post பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே திருப்பதி சென்ற ரயில்மீது கல்லூரி மாணவர்கள் கல்வீச்சு: பெண் படுகாயம் appeared first on Dinakaran.