டூவீலர்கள் மோதலில் ஒருவர் காயம்

 

தேவதானப்பட்டி, ஆக. 2: தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி(47). இவர் நேற்று சாத்தாகோவில்பட்டியில் இருந்து தேவதானப்பட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திம்மராயபெருமாள் கோவில் அருகே எதிரே டூவீலரில் வந்த தேனியைச் சேர்ந்த ஜீனத்பாபு(26) என்பவர் கருப்பசாமி மீது மோதி விபத்தை ஏற்பத்தினார். இதில் கருப்பசாமிக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் ஜீனத்பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதலில் ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: