புட்லூர் அம்மன் கோயிலில் மூதாட்டி செயின் திருட்டு

திருவள்ளூர் : கடலூர் மாவட்டம் முத்துநகர் சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வள்ளி (60). இவர் கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள அம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அங்கு, நள்ளிரவு 3 மணி அளவில் சாமிதரிசனம் செய்துவிட்டு பெரியபாளையத்தில் இருந்து புறப்பட்டு காலை 8 மணி அளவில் திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

அப்போது அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் கூழ் வாங்கி குடித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான், கழுத்தில் இருந்த 3 சவரன் செயின் திருடு போனது தெரியவந்தது. இதனால் மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post புட்லூர் அம்மன் கோயிலில் மூதாட்டி செயின் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: