ஜோலார்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (32). கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ராஜேஷ், கவுசல்யா ஆகிய இருவரும் தங்களது 3 வயது ஆண் குழந்தை கிஷோர் மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன், கவுசல்யாவின் தாய் வீடான திருப்பத்தூர் அடுத்த அங்கநாத வலசை பகுதிக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் கிஷோர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர், சிறிது நேரத்தில் குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியபோது, வீட்டின் எதிரே இருந்த தண்ணீர் தொட்டியில் கிஷோர் சடலமாக கிடப்பது தெரிந்தது.
The post தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி appeared first on Dinakaran.
