அப்போது மாம்பலம் தம்பையா சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பெண்கள், விஜயகுமார் பயணம் செய்த 12 ஜி பஸ்சில் ஏறுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது இரண்டு பெண்களும் விஜயகுமார் மனைவியின் அருகில் சென்று நிற்பது போல் நடித்து அவர் கைப்பையில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து 2 பெண்களின் புகைப்படத்தை வைத்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது, பிரபல கொள்ளைக்காரியான பரமக்குடியை சேர்ந்த கவிதா, அவரது உறவினர் ரேகா என்பது தெரியவந்தது. இவர்கள் மீது தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. பரமக்குடி கவிதா, ரேகாவுடன் சென்னையில் தங்கியிருந்து மக்கள் அதிகமாக பயணம் செய்யும் பஸ்சில் பயணம் செய்து வழிப்பறி செய்துவந்ததும் சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்களில் நகைகள், பொருட்கள் வாங்குவது போல் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த 15ம் ேததி கிண்டியில் பெண் ஒருவரிடம் மூன்றரை சவரன் செயினை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பரமக்குடி கவிதா, ரேகா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து பணம், நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post பஸ்கள் மற்றும் ஷாப்பிங் மால்களை குறிவைத்து வழிப்பறி: பிரபல கொள்ளைக்காரி தோழியுடன் பிடிபட்டார் appeared first on Dinakaran.