திரிணாமுல் பஞ். உறுப்பினர் சுட்டுக்கொலை

கேன்னிங்: மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் மக்ராஹட் கிழக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மைமுர் கராமி தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கத்தியால் அவரை குத்தினார்கள். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post திரிணாமுல் பஞ். உறுப்பினர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: