மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 29: இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒருபகுதியாக மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி திருத்துறைப்பூண்டியை அடுத்த நுணாக்காடு ஊராட்சியில் நடைபெற்றது. திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் தலைமை வகித்தார். விழாவில், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பயன்பாடு குறித்து இயற்கை விவசாய பயிற்றுனர் பாலம் செந்தில்குமார் செயல்முறை விளக்கமளித்தார்.
இதில் அலுவலர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்கா, பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: