சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை ஜூலை 31 முதல் பெறலாம் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். பிற தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.