இளம்பெண் ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ‘20 வயது அழகான இளம்பெண் என்னிடம் இருக்கிறாள். 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அழைத்து வருகிறேன். உனது ஆசைப்படி அவள் நடந்து கொள்வாள் என கூறினார். இதை கேட்டதும் அந்த வாலிபரும் ஆசையில், 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அந்த பெண், ‘நீ இங்கேயே நில். சுடிதார் அணிந்த இளம்பெண் வந்து உன்னை அழைப்பாள். அவள் பின்னால் சென்று விடு’ என கூறிவிட்டு சென்றார். வாலிபரும், ஆசையுடன் காத்திருந்தார்.

சுமார் 15 நிமிடம் கழித்து வந்த பெண், ‘இங்கு நிற்க வேண்டாம். போலீஸ் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். நீ என் பின்னால் வா’ என கூறி, அந்த வாலிபரை வடசேரி பஸ் நிலையத்தில் 4 ரூட் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வாலிபரை நிற்க வைத்து விட்டு சென்ற பெண், நீண்ட நேரமாக வர வில்லை. 2 மணி நேரம் வரை காத்திருந்தார். தன்னிடம் பணம் வாங்கிய பெண்ணை பஸ் நிலையம் முழுவதும் தேடினார். காணவில்லை. இந்த வாலிபர், பணம் கொடுத்ததை பார்த்த மற்றொரு பெண், ‘நீ அவளிடம் பணம் கொடுத்தவன் தானே. நீ ஏமாந்து விட்டாய். உனக்கு பணம் வராது.

ஊர் போய் சேரு’ என கூறினார். இதை கேட்டு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்ததுதான் மிச்சம், ஏமாற்றம் அடைந்து விட்டோமே’ என்ற ஒருவித ஏக்கத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இதே போல் தினமும் ஏராளமான வாலிபர்கள் ஏமாந்து போகிறார்கள். 40 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்ட 4, 5 பெண்கள், வயதான முதியவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு பணத்தை பறிக்கிறார்கள் என பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகள் சிலர் கூறினர். பணத்ைத கொடுத்து ஏமாந்தவர்கள், இது பற்றி புகார் அளிக்காததால், இந்த கும்பல் போலீசாரிடம் சிக்குவதில்லை. இங்கு திருட்டு மற்றும் விபசார புரோக்கர்களின் கைவரிசையை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இளம்பெண் ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: