பழநி தொப்பம்பட்டியில் வட்டார களஞ்சிய பொதுக்குழு கூட்டம்

பழநி, ஜூலை 26: பழநி அருகே தொப்பம்பட்டியில் வட்டார களஞ்சியத்தின் 22ம் அண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. வட்டார செயற்குழு உறுப்பினர் சுமதி வரவேற்று, புதிய திட்டங்களான மக்கள் பரஸ்பரம், பஞ்சாயத்து, சமுதாய கல்லூரி ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவனேசன் சிறப்புரையாற்றி, புதிய சமூக நெறியினை நோக்கி என்ற தலைப்பில் பண்டைய கலாச்சார பழக்க வழக்கங்கள் மற்றும் இதர திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் விதம் குறித்து எடுத்துரைத்தார். ஒருங்கிணைப்பாளர் கல்பனா 2022- 2023ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து சுகாதார திட்டம் மற்றும் வளர் இளம் பெண்களின் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பழநி தொப்பம்பட்டியில் வட்டார களஞ்சிய பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: