அரசு கலைக்கல்லூரியில் என்சிசிக்கு மாணவர் சேர்க்கை

தர்மபுரி, ஜூலை 26: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் என்சிசி மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் என்சிசியில் (தேசிய மாணவர் படை) 104 மாணவ, மாணவிகள் உள்ளனர். இந்த நிலையில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாணவர் சேர்க்கை முகாமை கல்லூரி முதல்வர் (பொ) ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சேலம் 12 பட்டாலியன் பிரிவு ராணுவ பிரிவை சேர்ந்த சுபேதார் சுசில்குமார், ஹவில்தார் சதானந்த் ஆகியோர் மாணவ, மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி, பொது அறிவு, எழுத்து தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தினர். இந்த முகாமில் 60 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில் 50 மாணவர்களும், 40 மாணவிகளுமாக 90 பேர் கலந்து கொண்டனர். என்சிசி சீனியர் அலுவலர் முருகன், என்சிசி திட்ட அலுவலர் தீர்த்தகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசு கலைக்கல்லூரியில் என்சிசிக்கு மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: