ரத்ததான முகாம்

 

காரைக்குடி, ஜூலை 24: காரைக்குடி அருகே கல்லல் முருகப்பா பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு டாக்டர் ஏபிஜே கலாம் பசுமை கரங்கள் அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார். டாக்டர் அருள்தாஸ், டாக்டர் ஆல்வின்ஜேம்ஸ், டாக்டர் கிஷேர்குமார் ஆகியோர் தலைமை வகித்து துவக்கிவைத்தனர். முருகப்பா பள்ளி தலைமையாசிரியர் அழகப்பன், ஆசிரியர் பிரபு, விஏஓ சங்க மாநில பொதுச் செயலாளர் அருள்ராஜ், கோடீஸ்வரன், சக்திசுமன், விநாயகமூர்த்தி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: