சென்னை அண்ணா அறிவாலயத்தில் 29ம் தேதி திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 29ம் தேதி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, வரும் 29ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், திமுக தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய இளைஞர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். கலைஞர் நூற்றாண்டை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது, ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்ட இளைஞர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் 29ம் தேதி திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: