மாரத்தான் ஓடிய மாணவர் திடீர் பலி

மதுரை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் தினேஷ்குமார் (20). இவர் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இவர், மதுரையில் நேற்று நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி காந்தி மியூசியம் வழியாக மீண்டும் மருத்துவக்கல்லூரியை வந்தடையும் வகையில் சுமார் 10 கிமீ தூரத்துக்கு நடந்தது.

போட்டி முடிந்த பின்,கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தினேஷ்குமார், சக மாணவர்களுடன் ஒரு மணிநேரம் இயல்பாக பேசி கொண்டிருந்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றபோது, திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மாரத்தான் ஓடிய மாணவர் திடீர் பலி appeared first on Dinakaran.

Related Stories: