கரூர், ஜூலை 22: கரூர் மாவட்ட மைய நூலகத்தில், ‘கேட்பொலி நூலகப் பிரிவில்’ (ஆடியோ விசுவல் லைப்ரரி), பார்வையற்ற மாற்றுத்திறனாளி வடிவேல் என்பவர், ரயில்வே ஆர்ஆர்பி குரூப்-டி தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை பெரம்பூரில் பணி நியமனம் பெற்றுள்ளார்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளி வடிவேலை, கரூர் கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.
