நீடூர், பெரம்பூர் கடலங்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

 

மயிலாடுதுறை, ஜூலை 20: தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நீடூர், பெரம்பூர் மற்றும் கடலங்குடி துணைமின் நிலையத்தில் இன்று (20ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் துணை மின்நிலையத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் பகுதிகள் நீடுர், மல்லியல்கொல்லை, வில்லியநல்லூர், கொவிடல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணாம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லுர், பெரம்பூர், கடக்கம், கிலியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி. பாலூர், கொடைவிளாகம், சூத்தூர், கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம் திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய ஊர்கருக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post நீடூர், பெரம்பூர் கடலங்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: