வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து 67,097 வரை அதிகரித்து புதிய வரலாற்று சாதனை அளவை பதிவு செய்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 19,829 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. சென்செக்ஸில் இருந்து இன்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹச்டிஎப்சி வங்கி ஆகியவை 3% வரை உயர்ந்து லாபம் ஈட்டின. மாருதி, மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பாரதி ஏர்டெல் ஆகியவை பின்தங்கி நஷ்டத்தை சந்தித்தன.
The post இந்திய பங்குச் சந்தைகளில் புதிய உச்சத்தில் வர்த்தகம்: சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து 67,097-ஆக அதிகரித்து சாதனை appeared first on Dinakaran.