ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

 

மதுரை, ஜூலை 19: மதுரையில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தர்ணா போராட்டம் நடந்தது. ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில், விமான பயணக்கட்டணச் சலுகையை கொரோனாவை காரணம்காட்டி ரத்து செய்தது. அவற்றை மீண்டும் வழங்க மறுக்கிறது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தங்கவேலு, சொக்கலிங்கம், சந்திரசேகரன், பானு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு கோரிக்கை மனுவை கலெக்டர் சங்கீதாவிடம் வழங்கினர்.

The post ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: