பவானி அருகே சேவல் சண்டை 4 பேர் கைது

ஈரோடு, ஜூலை 16: பவானி அடுத்துள்ள ஜம்பை பண்ணாடி தோட்டத்தில் சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் கரும்பு காட்டிற்குள் சேவல் சண்டை நடந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட கோபி, சிறுவலூர், சிதம்பரனார் வீதியை சேர்ந்த ரகுபதி (38), பி.மேட்டுப்பாளையம் பெரியார் வீதி கோகுல்நாத் (32), சேர்வராயன்பாளையம் செந்தில்குமார் (43), புன்னம் பகுதியை சேர்ந்த பிரகாஸ், மங்கலோஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post பவானி அருகே சேவல் சண்டை 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: