விழாவில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பேசுகையில், இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பம், மிகவும் திறமையான மருத்துவ வல்லுநர்கள் மற்றும் 650 படுக்கை வசதிகளை கொண்டதாகும். சிடி ஸ்கேன், மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்கள், தொலைதூர ஆலோசனைகளுக்கான டெலிமெடிசின் உள்கட்டமைப்பு, ஆகியவையும் இங்கு அமைந்துள்ளது என்றார். ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம், எம்எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் அறங்காவலர் குழுத்தலைவர் கலியபெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ஏர் மார்ஷல் (டாக்டர்) சி.கே.ரஞ்சன், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் எம்.லலிதா, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஹாஸ்பிட்டல் டீன் டாக்டர் வி. விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலர் நீல்ராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜபூபதி, மணி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நிதி அலுவலர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
The post தனலட்சுமி சீனிவாசன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: நவீன வசதிகளுடன் பெரம்பலூரில் திறப்பு appeared first on Dinakaran.