முன்னாள் முதல்வர் மெகபூபாவுக்கு வீட்டுக்காவல்

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் 1931ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி தோக்ரா ஆட்சியின்போது ராணுவத்தினால் 22 காஷ்மீர் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த இருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்க்கும் வகையில் மெகபூபா முப்தியை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற உமர் அப்துல்லாவுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. அவர் நடந்தே தனது கட்சி அலுவலகத்துக்கு சென்றார்.

The post முன்னாள் முதல்வர் மெகபூபாவுக்கு வீட்டுக்காவல் appeared first on Dinakaran.

Related Stories: