இக்குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து இடிந்தது. நாட்கள் செல்லச்செல்ல இக்குளத்தில் குப்பைகள் போடப்பட்டு, கழிவு நீர் சேர்ந்து பாசி படர்ந்து சாக்கடை குட்டையாக மாறி விட்டது. இதனால் இதில் தீர்த்தம் தெளிக்க வரும் பக்தர்கள் தீர்த்தக் குளத்தின் நிலையை பார்த்து மனம் வருந்துகின்றனர். மேலும் சமீபத்தில் இப்பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணி, தேசிய நெடுஞ்சாலை துறையினரின் சாலையோர மழைநீர் வடிகால் கால்வாய் பணியினால் குளம் மேலும் சேதமடைந்தது. கற்கள் கொட்டப்பட்டு தீர்த்தக் குளம் மெகா குப்பை தொட்டி போன்றும் காட்சியளிக்கிறது. இக்குளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனைவரும் புனித சீதா தீர்த்தம் குளத்தின் நிலையை பார்த்து மனம் வருந்தி செல்கின்றனர். இக்குளத்தை சீரமைக்க வேண்டிய கோயில் நிர்வாகம் இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளது. மக்களால் ஆன்மீக நம்பிக்கையுடன் பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வரும் சீதா தீர்த்தக்குளத்தை கோயில் நிர்வாகம் உடனடியாக மராமத்து செய்து குளத்து நீரை தூர்வாரி சுத்தப்படுத்தி தீர்த்தக்குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கழிவுநீர் தேங்கி கிடக்கும் சீதா தீர்த்த குளத்தை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.