பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி

அம்பை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கி ராஜ் (30), ஏசி மெக்கானிக். இவர், தாய் அலங்காரி என்ற சரஸ்வதி (50), தங்கை இசக்கியம்மாள் என்ற கார்த்திகா (25), தங்கையின் 2 வயது குழந்தை சந்துரு ஆகியோருடன் ஒரே பைக்கில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் உறவினர் இல்ல காதுகுத்து நிகழ்ச்சிக்கு நேற்று பாபநாசம் சென்று கொண்டிருந்தனர்.

பைக் மீது, கோடாரங்குளம் விலக்கு அருகில் டிப்பர் லாரி மோதியது. இதில் இசக்கிராஜ் உட்பட 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிந்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த அசோக் ராஜ் (33) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான இசக்கிராஜிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: