திருவண்ணாமலை வெற்றி

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கிரிக்கெட் போட்டி மெரினா வளாகம், லயோலா கல்லூரி, அசோக் நகர் உட்பட 6 களங்களில் நேற்று தொடங்கியது. குருநானக் கல்லூரில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் திருவண்ணாமலை – நீலகிரி மாவட்டங்கள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த திருவண்ணாமலை 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன் குவித்தது. அதிகபட்சமாக சுதீப் 21 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 43 ரன் விளாசினார். தொடர்ந்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட நீலகிரி 9.3 ஓவரில் 54 ரன்னுக்கு ஆல் அவுட்டாக… திருவண்ணாமலை 61 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த அணியின் அனீப் அகமது 1.3 ஓவர் வீசி 3 விக்கெட் கைப்பற்றினார். இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

 

The post திருவண்ணாமலை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: