மார்த்தாண்டன்துறையில் போதை விழிப்புணர்வு பேரணி

நித்திரவிளை, ஜூலை 4 : கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை பங்குப்பேரவை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பங்கு தந்தை சுரேஷ் பயஸ் தலைமை வகித்தார். பேரணியானது ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு மேடவிளாகம், சூசைபுரம் காலனி வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.இதில் பங்கு பொறுப்பாளர்கள், கன்னியாஸ்திரிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மார்த்தாண்டன்துறையில் போதை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: